sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்

/

போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்

போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்

போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்


ADDED : ஆக 24, 2011 12:21 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : எந்த முறையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதை, தமிழக அரசு தெளிவாக அறிவிக்கவில்லை என்றாலும், போட்டித் தேர்வு மூலமே ஆசிரியர் நியமனம் நடைபெற உள்ளது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்களைத் தவிர, மற்ற ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டனர். தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமில்லாமல், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.



இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாயக் கல்விச் சட்டத்தில், போட்டித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறுமா அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெறுமா என்பது இன்னும் தெரியவில்லை.



இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கட்டாயக் கல்விச் சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. எனவே, இடைநிலை ஆசிரியர்கள் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்) மட்டுமில்லாமல், பட்டதாரி ஆசிரியர்களும், போட்டித் தேர்வு வட்டத்திற்குள் வந்து விடுகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர். எனவே, இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில், பணி நியமனம் நடக்கும். கட்டாயக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும், கோர்ட்டில் தெரிவித்துள்ளோம். எனவே, முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



-நமது சிறப்பு நிருபர் -








      Dinamalar
      Follow us