sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பள்ளிகளில் 1:35 விகிதாச்சாரப்படி ஆசிரியர்களை மாற்றியமைக்க உத்தரவு

/

அரசு பள்ளிகளில் 1:35 விகிதாச்சாரப்படி ஆசிரியர்களை மாற்றியமைக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் 1:35 விகிதாச்சாரப்படி ஆசிரியர்களை மாற்றியமைக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் 1:35 விகிதாச்சாரப்படி ஆசிரியர்களை மாற்றியமைக்க உத்தரவு


ADDED : ஆக 21, 2011 01:57 AM

Google News

ADDED : ஆக 21, 2011 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளிகளில் 1:35 என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்களை மாற்றி அமைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் கட்டாயக் கல்வி ஆணையம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடந்தது. டில்லியில் இருந்து வந்த ஆணைய உறுப்பினர், ஒன்றியம் வாரியாக நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். இவர் நடத்திய ஆய்வில், பெரும்பாலான பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மாணவர்கள் வரத்து இல்லாத கிராமப்புற பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பணியாற்றி வருவதை கண்டறிந்தார். அரசு உத்தரவு: இதையடுத்து, தேசிய குழந்தைகள் கட்டாய கல்வி ஆணையம், பள்ளிகளில் 1:35 என்ற மாணவர்கள் விகிதத்தில் ஆசிரியர் பணியிடம் நியமிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் இந்த விகிதாச்சார முறைப்படி ஆசிரியர் பணியிடங்களை மாற்றி அமைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரிடமிருந்து தகவல் வந்துள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.



நமது சிறப்பு நிருபர்








      Dinamalar
      Follow us