sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மாத சம்பளம் வரவில்லை ஆசிரியர்கள் அதிர்ச்சி

/

 மாத சம்பளம் வரவில்லை ஆசிரியர்கள் அதிர்ச்சி

 மாத சம்பளம் வரவில்லை ஆசிரியர்கள் அதிர்ச்சி

 மாத சம்பளம் வரவில்லை ஆசிரியர்கள் அதிர்ச்சி


ADDED : ஜன 01, 2026 01:50 AM

Google News

ADDED : ஜன 01, 2026 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், 50 சதவீத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

தமிழகத்தில் 8,000க்கும் அதிகமான அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், பணியாற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில், ஒவ்வொரு மாத இறுதியிலும், 30 அல்லது 31ம் தேதிகளில், சம்பளம் வரவு வைக்கப்படும்.

இந்நிலையில், தமிழகத் தில், 50 சதவீத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம், வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு மாதம் இறுதியிலும், சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

'ஆனால், தற்போது, பள்ளிகளில் இருந்து பில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us