sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை சொல்லுங்க; முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

/

தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை சொல்லுங்க; முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை சொல்லுங்க; முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை சொல்லுங்க; முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

50


ADDED : மார் 05, 2025 01:43 PM

Google News

ADDED : மார் 05, 2025 01:43 PM

50


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை என்னென்ன? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத் தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ., வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறு பாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும் ' என குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் எல்லைகள் கடந்து தமிழ் மொழியை வளர்க்க நீங்கள் செய்த சாதனைகள் என்னென்ன? தமிழ் மொழி தமிழகத்தின் எல்லைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதே உங்கள் எண்ணம்.

தமிழின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பரப்ப பிரதமர் மோடி செய்ததில் பாதியாவது நீங்கள் செய்தீர்களா? தமிழகத்தில் முதல் ஹிந்தி ஆசிரியர் பயிற்சி கல்லூரி 1922ம் ஆண்டு ஈரோட்டில் துவங்கப்பட்டது. சமஸ்கிருதம் மொழிக்கு அதிக ரூபாய் ஒதுக்கியதாக கூறும் நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்), அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

ஹிந்தியை நாடு முழுவதும் பிரபலப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 170க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இவ்வாறு முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us