ADDED : ஜன 29, 2026 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோடை வெயிலால், வரும் மார்ச் முதல் மின் தேவை அதிகரிக்கும். இந்தாண்டு சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
எனவே, மின் சாதன பழுதுகளை விரைவாக சரி செய்வதற்காக, பிரிவு அலுவலகங்களில், வரும் பிப்., 1 முதல் மே 31ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து கொள்ளுமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

