sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெகபர் அலி கொலை விவகாரம்; புதுக்கோட்டையில் 4 தாசில்தார்கள் அதிரடி டிரான்ஸ்பர்

/

ஜெகபர் அலி கொலை விவகாரம்; புதுக்கோட்டையில் 4 தாசில்தார்கள் அதிரடி டிரான்ஸ்பர்

ஜெகபர் அலி கொலை விவகாரம்; புதுக்கோட்டையில் 4 தாசில்தார்கள் அதிரடி டிரான்ஸ்பர்

ஜெகபர் அலி கொலை விவகாரம்; புதுக்கோட்டையில் 4 தாசில்தார்கள் அதிரடி டிரான்ஸ்பர்

1


ADDED : ஜன 27, 2025 06:55 PM

Google News

ADDED : ஜன 27, 2025 06:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை சம்பவம் எதிரொலியாக 4 தாசில்தார்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் கனிம வளம் கொள்ளை அடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் மனு அளித்து வந்துள்ளார். அதன் காரணமாக அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 17ம் தேதி(ஜன) தமது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று மோதியதில் பலியானார். மரணத்தில் உறவினர்கள் சந்தேகம் எழுப்ப, 5 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 தாசில்தார்களை டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இவர்களில் திருமயம் தாசில்தார் புவியரசுனும் அடக்கம். அவர் மாற்றப்பட்டு உள்ளார்.

தனி வட்டாட்சியர் நெடுஞ்சாலை திட்ட நிலம் எடுப்பு பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதே போன்று துளையானூர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us