சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
ADDED : ஜன 22, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை மாவட்டம் அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பால செல்வமுருகன் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இங்கு தினமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட எட்டு பேர் கொண்ட குழு இன்று இரவு 8 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டு இருப்பதாக தெரிய வருகிறது. எனினும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.