ADDED : செப் 27, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான போட்டியில், கீழடி, மேல்கலிங்கம்பட்டி கிராமங்கள் வெற்றி பெற்றுள்ளன.
உலக சுற்றுலா தினத்தையொட்டி, சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான போட்டியை, மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்தது. இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களில்,சுற்றுலாவை மேம்படுத்த, இந்த போட்டி கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
போட்டிக்கு, 795 கிராமங்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு, 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் எட்டு பிரிவுகளின் கீழ், 36 கிராமங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பாரம்பரிய சுற்றுலா கிராம பிரிவில், சிவகங்கை மாவட்டம் கீழடி; ஆன்மிக மற்றும் ஆரோக்கிய சுற்றுலா கிராம பிரிவில், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள மேல்கலிங்கம்பட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.