ADDED : பிப் 04, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாஸ்மாக் கடைகளுக்கு மது விலை உயர்வு குறித்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதில், குறிப்பிட்டுள்ள விலைக்கு மட்டுமே விற்க வேண்டும். அதைவிட கூடுதல் விலைக்கு விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களில், 44 சதவீதம் டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான ஆலைகளில் இருந்து வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது, தவறான தகவல்.
வேண்டுமென்றால், எந்தெந்த நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்றன என்ற பட்டியலை வெளியிட தயாராக உள்ளோம்.
-முத்துசாமி,
அமைச்சர், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை.