sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

/

தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

13


ADDED : அக் 06, 2024 09:39 PM

Google News

ADDED : அக் 06, 2024 09:39 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்யத் தவறிய தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு போலீசாரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடால் உருவான விடியா தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us