sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!

/

ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!

ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!

ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!

5


ADDED : ஜன 04, 2025 08:51 AM

Google News

ADDED : ஜன 04, 2025 08:51 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக துவங்கியது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டு இதுவாகும். மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு, புனித விண்ணேற்பு அன்னை சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். இந்தாண்டு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று (ஜன.,04) துவங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனால், மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறம் தடுப்புகள், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது, வழக்கம் போல தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us