sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமியின் உடல் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது

/

சிறுமியின் உடல் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது

சிறுமியின் உடல் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது

சிறுமியின் உடல் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது


ADDED : ஜன 09, 2024 01:51 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;பந்தலூரில் சிறுத்தை தாக்கி சிறுமி பலியானதை அடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், விமான மூலம் சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஏலமன்னா பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளியின், 3 வயது குழந்தை நான்சி சிறுத்தை புலி தாக்கி பலியானார்.

இந்நிலையில் குழந்தையின் உடல் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் , நேற்று சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கலெக்டர் அருணா ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் பெற்றோர்களை சந்தித்து, குழந்தையின் பெற்றோரை ஆரத்தழுவி வருத்தம் தெரிவித்து கண்ணீருடன் பெற்றோரை வழி அனுப்பி வைத்தார். ஊட்டியில் இருந்து சிறுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கிருந்து ராஞ்சி வரை விமான மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

ராஞ்சியிலிருந்து அவர்களுடைய கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை ராஞ்சி மாவட்ட கலெக்டரிடம் நீலகிரி கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி எம்.பி., ராஜா சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனது சொந்த செலவில் விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us