sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

/

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

8


ADDED : ஜன 22, 2025 07:21 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:21 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.

தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனுஷ் மற்றும் நெட்பிலிக்ஸ் தரப்பில் காரசாரமான வாதம் நடந்தது.

நெட்பிலிக்ஸ் வாதம்: காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரமுடியாது. ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், 3வது நபர் எடுத்தது. அப்படியே வழக்கு போட்டாலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. காஞ்சிபுரத்திலோ அல்லது மும்பையிலோ தான் வழக்கு போட முடியும். எனவே, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், இவ்வாறு வாதிட்டனர்.

தனுஷ் தரப்பு வாதம்: ஆவணப்படத்தில் உள்ள நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் தனது படப்பிடிப்பு தளத்தில் தான் எடுக்கப்பட்டது. படத்தின் அனைத்துக் காட்சிகளும் தனுஷூக்கு சொந்தமானவை. ஆடை, சிகை அலங்காரம் முதல் அனைத்தும் கம்பெனிக்கு சொந்தம் என தெரிந்தே பட ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டார். பட ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னையில் தான் அலுவலகம் இருந்தது. எனவே, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியும், என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.






      Dinamalar
      Follow us