UPDATED : டிச 02, 2024 08:56 AM
ADDED : டிச 02, 2024 08:41 AM

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது.
புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 510 மி.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில், பதிவான மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு: ( 1செ.மீ.,= 10 மி.மீ.,)
கிருஷ்ணகிரி மாவட்டம்
* ஊத்தங்கரையில்- 503 மி.மீ.,
* ஜம்புகுட்டபட்டி- 250 மி.மீ.,
* போச்சம்பள்ளி 250 மி.மீ.,
* பாம்பாறு அணை- 210 மி.மீ.,
* பரூர் 200 மி.மீ.,
* பெனுகொண்டபுரம் 190 மி.மீ.,
* நெடுங்கல் 140 மி.மீ.,
* கிருஷ்ணகிரி நகர்- 110 மி.மீ.,
* கே.ஆர்.பி., அணை பகுதி - 100 மி.மீ.,
* சேலம், ஏற்காடு- 238 மி.மீ.,
* தர்மபுரி, அரூர்- 330 மி.மீ.,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
* திருப்பாலபந்தல் - 320 மி.மீ.,
* மாதம்பூண்டி- 310 மி.மீ.,
* வேங்கூர் - 267 மி.மீ.,
* திருக்கோவிலூர் - 262 மி.மீ.,