sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!

/

பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!

பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!

பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!

14


UPDATED : ஜூன் 15, 2025 09:01 PM

ADDED : ஜூன் 15, 2025 12:38 PM

Google News

UPDATED : ஜூன் 15, 2025 09:01 PM ADDED : ஜூன் 15, 2025 12:38 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார்.

விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனினும் இந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



இந்நிலையில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், பனைமரம் ஏறி, கள் இறக்கினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார்.

இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே பனை மரத்தில் ஏறி சீமான் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிளகு ரசமா சரக்கு?

பனை மரம் ஏறி கள் இறக்கி, குடித்த பிறகு சீமான் பேசியதாவது: கள் விஷம் என்றால், டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் சரக்கு மிளகு ரசமா? கள் இறக்க தமிழகத்தில் மட்டும் ஏன் தடை? டாஸ்மாக் கடையை மூடி கள்ளுக் கடையைத் திறக்க வைப்போம்.


கள் நம் வாழ்வியலோடு சேர்ந்த உணவு. வனத்தில் மேச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து, ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போகிறேன். அதில் தீர்வு கிடை க்கவில்லை என்றால் 3 ஆயிரம் ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு நானே மேய்க்கச் செல்வேன்.ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். இன்னும் 10 மாதம் தான் இருக்கிறது.

விவசாயி என்று எனக்கு எண்ணம் மட்டும் அல்ல. சின்னமும் அதான். சின்னத்திலும் நான் தான் இருக்கிறேன். அஞ்சுவதும், அடி பணிவதும் தமிழர் பரம்பரைக்கு கிடையாது. தடை என்றால் அதை உடை. தைரியமாக இருங்கள், ஏதற்கு எல்லாம் தடை இருக்கிறதோ. அதனை எல்லாம் எதிர்த்து போரிட்டு நொறுங்குவோம். இவ்வாறு சீமான் பேசினார்






      Dinamalar
      Follow us