ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது: வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது: வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
UPDATED : ஜூலை 07, 2024 07:07 AM
ADDED : ஜூலை 06, 2024 08:31 PM

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று(ஜூலை 07) காலை விசாரணைக்கு வருகிறது..கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு 6 பேர் கொண்ட மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.உரிய அனுமதி தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதை எதிர்த்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக இன்று இரவே விசாரணைக்கு ஏற்க கோரப்பட்டது. . நீதிபதி அனிதா சுமந்த், நாளை (ஜூலை 07) காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துவதாக அறிவித்தார்.
உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு
இதனிடையே படுகொலை செய்ய்பபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல் எம்பாமிங் செய்யபபட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வேன் மூலம் அயனாவரத்தில் உள்ள இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் மூன்று பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் புளியந்தோப்பை சேர்ந்த கோகுல் விஜய் சக்தி என்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது. பெரம்பூர் அரசு பள்ளி மைதானத்த்திற்கு உடல் கொண்டு செல்லப்பபடும் எனவும பந்தர் கார்டன் அரசு மேல் நிலை பள்ளியில் பொதுமக்களின்அஞ்சலி்க்காக உடல் வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் எட்டு பேருககு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு் உள்ளது. எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
இன்று காலை 8.30 மணிக்கு விசாரணை
ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்பபுராயன் முன்னிலையில் இன்று காலை 8.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.