sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெயில் காலம் துவங்கியது.. அதிகாலை குளிர்; பகலில் சூடு

/

வெயில் காலம் துவங்கியது.. அதிகாலை குளிர்; பகலில் சூடு

வெயில் காலம் துவங்கியது.. அதிகாலை குளிர்; பகலில் சூடு

வெயில் காலம் துவங்கியது.. அதிகாலை குளிர்; பகலில் சூடு

2


ADDED : பிப் 05, 2025 06:26 AM

Google News

ADDED : பிப் 05, 2025 06:26 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை பனி மூட்டம் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் காலம் துவங்கி விட்டது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:



தமிழகத்தில் வடக்கில் இருந்து வீசும், வாடை காற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அதிகாலை பனி மூட்டம் ஏற்படுகிறது. லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டாலும், பல்வேறு இடங்களில், நேற்று அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டது. இது, மேலும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இன்றும், நாளையும் பகல் நேரத்தில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேக மூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பிப்., மாதத்திலேயே இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளதால், கோடையின் தாக்கம் இப்போதே துவங்கி விட்டது.






      Dinamalar
      Follow us