sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!

/

திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!

திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!

திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!

5


ADDED : ஜூலை 26, 2025 06:37 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 06:37 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருட்டுகளும் உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக என இபிஎஸ் பிரசாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் வருவது ஒரு வருகை. அது அவ்வளவுதான், நான் அதில் எண்ணத்தை பார்க்க, அதிகாரத்தில் இருந்தா வெள்ளைக்கொடி காட்டுவார்கள், எதிர்க்கட்சியாக இருந்தால் கருப்புக்கொடி காட்டுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

கேள்விகளும், பதிலும்!

நிருபர்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

சீமான் பதில்: அவசரம் அவசரம், மாநாடு நடத்தி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். காத்திருங்கள்.

நிருபர்: திமுகவின் திருட்டுகளும், உருட்டுக்களும் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்?

சீமான் பதில்; இது கொஞ்சம் முடிந்த பிறகு அவங்க வந்து அதிமுகவின் திருட்டுகளும், உருட்டுகளும் என ஆரம்பிப்பார்கள். மக்கள் இருட்டில் நின்று முழித்துக் கொண்டிருப்பார்கள்.இந்த உருட்டு தான் 60 வருடமாக நடக்கிறது. இவர்கள் அவர்களை சொல்வார்கள். அவர்கள் இவர்களை சொல்வார்கள்.

மாடு மேய்க்கும் போராட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி தேனி மாவட்டம் அடப்பாறையில் நடைபெறும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று, மலையேறி மாடுகளை மேய்க்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, இந்த மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us