sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணியில் விரிசல் வராதா என காத்திருக்கின்றனர்: உதயநிதி

/

கூட்டணியில் விரிசல் வராதா என காத்திருக்கின்றனர்: உதயநிதி

கூட்டணியில் விரிசல் வராதா என காத்திருக்கின்றனர்: உதயநிதி

கூட்டணியில் விரிசல் வராதா என காத்திருக்கின்றனர்: உதயநிதி

23


ADDED : நவ 07, 2024 12:42 PM

Google News

ADDED : நவ 07, 2024 12:42 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: 'பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜ.,வும் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்து இருக்கிறார்கள்' என துணை முதல்வர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதி எம்.பி.,க்கான புதிய அலுவலகம், கருணாநிதி நுாலகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர் தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசியதாவது: நான் துணை முதல்வராக வர வேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதுவும் முன்னாள் எம்.பி., பழனிமாணிக்கம் தான் கூறினார். அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். முதல்வர ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான்.

மகளிர் வளர்ச்சி

இந்தியாவில் தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் . மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டணியில் விரிசல்

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.

பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜ.,வும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார்.

200 தொகுதிகள்

நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பார். 7வது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க.,வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அந்த ராசியின் படி உடனே நிறைவேறி விடும் என கூறினார்கள்.

தீர்மானம்

நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பிறகு அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதல்வராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல், அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us