sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பக்தி மழையில் தொடங்கிய திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா!

/

பக்தி மழையில் தொடங்கிய திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா!

பக்தி மழையில் தொடங்கிய திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா!

பக்தி மழையில் தொடங்கிய திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா!

1


ADDED : ஜன 18, 2025 10:12 AM

Google News

ADDED : ஜன 18, 2025 10:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்; திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுலபஞ்சமி தினத்தில் முக்தி அடைந்தார். அங்கு ஆண்டுதோறும், பகுல பஞ்சமி தினத்தில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிக்கு ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா, கடந்த ஜன.14ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (18ம் தேதி) அதிகாலை, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டாகி, மேளதாளங்கள் முழங்க, வீதி உலாவாக அவரின் சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது.

பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, அருண் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த கர்நாடக சங்கீத கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை ராகத்தில் அமைந்த பாடலில் துவங்கி, கௌளை ராகம், ஆரபி ராகம், வராளி ராகம், இறுதியாக ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

இதை தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்களின் ஹரிகதை, பாட்டு, புல்லாங்குழல், நாகசுரம் நகிழ்ச்சிகளும், இரவு 10:40 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us