UPDATED : ஜூலை 26, 2025 10:25 AM
ADDED : ஜூலை 26, 2025 06:50 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 25) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
ஆசிரியருக்கு குண்டாஸ்
மாணவியரின் வாக்குமூலம் அடிப்படையில், குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழும உறுப்பினர் புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த, 3ம் தேதி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி எஸ்.பி., நிஷா பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, குண்டர் தடுப்பு சட்டத்தில் செந்தில்குமாரை கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.
சில்மிஷ செக்யூரிட்டி சிக்கினார்
சில தினங்களுக்கு முன், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வெளிப்புற கேட்டை உடைத்து உள்ளே சென்ற முருகேசன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி பெற்றோர் புகாரில், கிருஷ்ணகிரி மகளிர் போலீசார், முருகேசனை கைது செய்தனர்.
தலைமையாசிரியருக்கு கம்பி
இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் புகாரின்படி, ரமேஷ் குமாரை போக்சோ சட்டத்தில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கைது செய்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தண்டாயுதபாணி விசாரணை நடத்தி, தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார்.
பாய்ந்தது குண்டர் சட்டம்
ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி விசாரித்த, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் ஏற்றதால், தமிழ்செல்வன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
