ADDED : ஆக 14, 2025 07:17 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
சில்மிஷ ஆசிரியர் சிக்கினார்
அதன்படி, ஜெயராஜ் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, குழந்தைகள் நலக்குழு தாமாக முன் வந்து நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போக்சோவில் ஜெயராஜ் நேற்று கைது செய்யப்பட்டார்.
வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
துாத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி முருகன், மாயகிருஷ்ணனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 1 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
படை வீரருக்கு '5 ஆண்டு'
சிறுமி குடும்பத்தினர் புகாரின்படி, திருப்பூர் ரயில்வே போலீசார் தனஞ்செயனை போக்சோவில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா, தனஞ்செயனுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
