பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியோர் கைது
பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியோர் கைது
ADDED : டிச 24, 2024 04:27 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடலில், நேற்று புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சேர்ந்த முத்து, 55, உறவினர்களுடன் புனித நீராடினார்.
அவரது 27 வயது மகள், உறவினர்கள் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் உள்ள தனியார் பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று உடைகளை மாற்றினார்.
அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, முத்துவின் மகள் கண்டுபிடித்து தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் முத்து புகார் அளித்தார்.
ராமேஸ்வரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராமேஸ்வரம் தம்பியான்கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், 34, ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மீரான் மைதீன், 38, ஆகியோரை கைது செய்தனர்.
இங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளனர்.