sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வட மாநிலத்தவர் 3 பேர் கைது

/

திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வட மாநிலத்தவர் 3 பேர் கைது

திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வட மாநிலத்தவர் 3 பேர் கைது

திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வட மாநிலத்தவர் 3 பேர் கைது

20


UPDATED : பிப் 19, 2025 09:32 AM

ADDED : பிப் 19, 2025 08:04 AM

Google News

UPDATED : பிப் 19, 2025 09:32 AM ADDED : பிப் 19, 2025 08:04 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த, பீஹார் மாநில இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் கத்தி முனையில் மிரட்டி, கணவர் முன்பே, வட மாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பெண் அளித்த புகார் படி, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, நதீம், டானிஷ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய போக்சோ வழக்குகள் விபரம்



திருச்சி ஆசிரியருக்கு 'கம்பி'

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போதாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் சூசைநாதன், 58. இவர், அதே பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும், 6 வயது மாணவிக்கு, வகுப்பறையில் வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமி தன் தாயிடம் கூற, அவர் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியரை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.



16 வயது மாணவன் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.



ஏ.ஹெச்.எம்., சிக்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 58, பத்தாம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி., குமார், அரிமளம் போலீசார், பெருமாள் மற்றும் மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நல மைய அலுவலர்கள் புகாரின் படி, திருமயம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, பெருமாளை நேற்று கைது செய்தனர்.



17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.








      Dinamalar
      Follow us