sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி

/

தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி

தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி

தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி


ADDED : ஏப் 10, 2025 04:59 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர், பாகேபள்ளி தாலுகா, குட்டமிடபல்யா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி, 48. கால்நடை விவசாயி. 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வருவார்.

நேற்று ஆடுகளை மேய்ச்சல் முடிந்து, கொட்டகைக்கு அழைத்து வந்தார். அப்போது, கூட்டமாக வந்த ஆறு தெரு நாய்கள், ஆடுகளை கடிக்க துவங்கின. ஆடுகள் சிதறி ஓடத் துவங்கின. இதை பார்த்த வெங்கடசாமி, நாய்களை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயற்சித்தார்.

ஆனால், நாய்கள் ஆக்ரோஷமாக ஆடுகளை கடித்தன. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன. சில ஆடுகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. இதை பார்த்த அப்பகுதியினர் தெரு நாய்களை விரட்டினர்.

இதுகுறித்து படாபல்யா கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் வெங்கடேஷ், தெரு நாய்களுக்கு வெறி பிடித்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். தெரு நாய்களின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை எனவும், இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பொதுமக்கள் கூறி உள்ளனர்.






      Dinamalar
      Follow us