பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது
பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது
ADDED : பிப் 05, 2025 02:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 3 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருக்கலைப்பு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.