sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்; அமைச்சர் வேலு தகவல்

/

திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்; அமைச்சர் வேலு தகவல்

திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்; அமைச்சர் வேலு தகவல்

திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்; அமைச்சர் வேலு தகவல்

1


ADDED : டிச 07, 2024 01:38 PM

Google News

ADDED : டிச 07, 2024 01:38 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை; திருவண்ணாமலை தீபத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமைச்சர் எ.வ. வேலு கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி;

2000 பேர் ஓராண்டுக்கு திருவண்ணாமலையில் ஏறும் நிலை இருந்தது. இது வரைக்கும் பெய்யாத ஒரு பெரிய மழை, 1965ம் ஆண்டுக்கு பின்னர் பெய்துள்ளது. அதன் பின்னர் 1972ம் ஆண்டு இப்போது பெய்த மழையில் பாதியளவு பெய்துள்ளது.

அக்னி மலையான திருவண்ணாமலையே குளிர்ந்துவிட்டதால் தான் இன்றைக்கு ஒரு பெரிய பாறையே வீட்டின் மீது விழும் சூழல் எழுந்தது. மலை மீது 2000 பேர் ஏறினால் சரியாக இருக்குமா என்ற நிலையில் தான் முதல்வர் 8 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். அவர்கள் அங்குள்ள மண்ணின் நிலை, எத்தனை பேர் போகலாம் என்று அறிக்கை கொடுத்த பின்னர், அதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்படும்.

தீபத்தன்று 11,500 பேர் வரை அனுமதிக்கலாம் என ஆணையாளர் கூறி உள்ளார். ஆன்லைன் மூலமாக 500 டிக்கெட்டுகள் பரணி தீபம் அன்று அனுமதிக்கப்படும். மகாதீபம் அன்று 1,500 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் அனுமதிக்கப்படும்.

ஒட்டுமொத்தமாக 11,500 பேர் தீபத்தன்றும், மகா தீப நாளில் 6,600 பேரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறை கூடுதல் கவுண்ட்டர்கள் அதிகமாக அமைக்க இருப்பதால் யாரும் நீண்ட நேரம் காக்க வேண்டிய நிலை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us