sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ. மாவட்ட நிர்வாகி கொலையாளிகள் மீது கைது நடவடிக்கை அவசியம்; அண்ணாமலை வலியுறுத்தல்

/

பா.ஜ. மாவட்ட நிர்வாகி கொலையாளிகள் மீது கைது நடவடிக்கை அவசியம்; அண்ணாமலை வலியுறுத்தல்

பா.ஜ. மாவட்ட நிர்வாகி கொலையாளிகள் மீது கைது நடவடிக்கை அவசியம்; அண்ணாமலை வலியுறுத்தல்

பா.ஜ. மாவட்ட நிர்வாகி கொலையாளிகள் மீது கைது நடவடிக்கை அவசியம்; அண்ணாமலை வலியுறுத்தல்

27


ADDED : டிச 20, 2024 04:18 PM

Google News

ADDED : டிச 20, 2024 04:18 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; பா.ஜ., மாவட்ட நிர்வாகி படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

வேலூர் மாவட்ட பா.ஜ., ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், கடந்த 16.12.2024 அன்று, தி.மு.க., ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பா.ஜ.,வினர் போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில், தி.மு.க., ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது. இதிலிருந்து, விட்டல்குமார் படுகொலையில், தி.மு.க., நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. தி.மு.க.,வோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக, விட்டல் குமார் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் தி.மு.க.,வே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us