sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பராமரிப்பில்லாத மின்கம்பங்களால் அதிகரிக்கும் பலி: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

/

பராமரிப்பில்லாத மின்கம்பங்களால் அதிகரிக்கும் பலி: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பராமரிப்பில்லாத மின்கம்பங்களால் அதிகரிக்கும் பலி: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பராமரிப்பில்லாத மின்கம்பங்களால் அதிகரிக்கும் பலி: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு


ADDED : ஆக 13, 2025 11:48 AM

Google News

ADDED : ஆக 13, 2025 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நான்காண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் மின் கம்பங்களால் ஏற்படும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

தாம்பரத்தில் கடைக்குச் சென்ற 35 வயதுடைய அஸ்வின் என்பவர் மின்சாரக் கம்பத்தில் இருந்த ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த நான்காண்டுகளாக முறையாக பராமரிப்பின்றி கிடக்கும் மின் கம்பங்களால் ஏற்படும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. ஆளும் அரசின் அலட்சியத்தால் இதுபோன்ற அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம். அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றது.

எனவே, இன்னும் சில வாரங்களில் பருவ மழைக்காலம் துவங்க இருப்பதால், தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சரி செய்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us