இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: கணித்துச் சொன்னது வானிலை மையம்
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: கணித்துச் சொன்னது வானிலை மையம்
ADDED : அக் 24, 2024 01:35 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,24) 19 மாவட்டங்களிலும், நாளை (அக்.,25) 20 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல்,
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று(அக்.,24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், நாகை, மயிலாடுதுறை, திரூவாரூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் நாளை(அக்.,25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் அக்டோபர் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.