நாளை 9, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை 9, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : மே 31, 2024 03:27 PM

சென்னை: தமிழகத்தில் நாளை( ஜூன்1) 9 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 11 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகி உள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.
வெப்ப நிலையை பொறுத்தவரை திருத்தணியில் அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று( மே 31) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை(ஜூன்1), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களிலும்
நாளை மறுநாள்(ஜூன்2) தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கேரளாவுக்கும் எச்சரிக்கை
இதனிடையே, கேரளாவிலும் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்கோடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.