ADDED : மார் 02, 2026 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நாளை முதல் இரண்டு நாட்கள் தேர்தல் பயிற்சி அளிக்கப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனாபட்நாயக் தெரிவித்து உள்ளார்.
அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்:
மண்டல அளவில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

