மைக் புலிகேசி; சீமானை மறைமுகமாக சாடிய திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார்
மைக் புலிகேசி; சீமானை மறைமுகமாக சாடிய திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார்
ADDED : பிப் 19, 2025 01:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: 'கேவலமான எண்ணம் படைத்த மனிதராக இருப்பார் என்று நினைக்கிறேன். மைக் புலிகேசியின் தரம் அவ்வளவு தான்' என சீமானை மறைமுகமாக திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் கிண்டல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக, திருச்சி நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி., வருண் குமார் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக சாடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஏதும் பேச விரும்பவில்லை. வழக்கை வாபஸ் வாங்கமாட்டேன். மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்கிறார்கள். கேவலமான எண்ணம் படைத்த மனிதராக இருப்பார் என்று நினைக்கிறேன். மைக் புலிகேசியின் தரம் அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.