sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

/

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

16


ADDED : மே 07, 2025 06:01 PM

Google News

ADDED : மே 07, 2025 06:01 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில் கடைகளுக்கு புதிய மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், 45, போர்மேன் நந்தகோபால், 52, ஆகியோர், மனுதாரரிடம் மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதனை கொடுக்க மனமில்லாத மனுதாரர், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், போர்மேன் நந்தகோபால் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us