ADDED : ஜன 18, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணத்தம்மாள். வங்கி ஊழியர்.
இவரது மகள் ஜனனி நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு தானமாக வழங்கினார்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இவரை பாராட்டி குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.
இந்நிலையில் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க மதுரை வந்த அமைச்சர் உதயநிதி, நேற்று காலை பூரணத்தம்மாள் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.