ADDED : ஜன 25, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து, கல்லுாரிகளில் அறிவிப்பு பலகை வைக்க, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் எழுந்தால், நீதிமன்ற உத்தரவுப்படி, அதன் மீது எத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்; தண்டனை வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும்.
பெண்களுக்கான உதவி எண்களையும் வளாகங்களில் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.