sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக ஊடகங்களின் வருவாய்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

/

சமூக ஊடகங்களின் வருவாய்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

சமூக ஊடகங்களின் வருவாய்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

சமூக ஊடகங்களின் வருவாய்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

2


UPDATED : பிப் 27, 2026 04:42 AM

ADDED : பிப் 27, 2026 03:40 AM

Google News

2

UPDATED : பிப் 27, 2026 04:42 AM ADDED : பிப் 27, 2026 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சமூக ஊடகங்கள், தங்கள் தளங்களில் பயனர்களால் வெளியிடப்படும் பதிவுகள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, அதை உருவாக்கியவர்களுடன் நியாயமாக பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சமூக ஊடக தளங்கள், பெரிய ஊடகங்கள் மட்டுமின்றி சாதாரண பதிவாளர்களின் ஊடக பணிகள் மற்றும் படைப்புகளின் வாயிலாகவும் கணிசமான வருவாய் ஈட்டுகின்றன. எனவே, அந்த வருவாயை அவை நியாயமாக அவற்றுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை, சமூக ஊடகங்கள் தாமாக முன்வந்து செய்ய வேண்டும். இல்லையெனில், அதை சட்ட வழியில் செய்ய வைப்போம்.

பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கு அறிவுசார் சொத்து அடிப்படையாக இருந்து வருகிறது. அதை மதித்து, நியாயமாக சன்மானம் வழங்காமல் இருந்தால் சமூக வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி தடைபடும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us