ADDED : செப் 09, 2026 04:47 AM

சென்னை: ''சட்டசபையில் மக்களுக்கு வேண்டிய விஷயங்கள் குறித்து பேசபடவில்லை,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேம லதா தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கு தான் சட்டசபை உள்ளது. ஆனால், தற்போது வெறும் விவாதங்களும், சண்டைகளும் தான் நடக்கின்றன. இதனால் நேரம் வீணாகிறது.
தி.மு.க., - எம்.எல்.ஏ..,கள் வெளியேற்றப்பட்டனர். கூட்டணியில் நானும் இருப்பதால், என்னுடைய கருத்துகளை கூற வேண்டும் என, சபாநாயகரிடம் அனுமதி கேட்டேன்.
ஆனால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, நானும் வெளிநடப்பு செய்தேன். சட்டசபையில், 'மிசா' மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து, முதல்வர் பேசியது பழைய வரலாறு.
மக்களுக்கு வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்படவில்லை. மக்களுக்கு உபயோகம் இல்லாத ஒரு சட்டசபையாக தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
