sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேங்மேன்களை பணிவிடுவிப்பு செய்ய வலியுறுத்தல்

/

கேங்மேன்களை பணிவிடுவிப்பு செய்ய வலியுறுத்தல்

கேங்மேன்களை பணிவிடுவிப்பு செய்ய வலியுறுத்தல்

கேங்மேன்களை பணிவிடுவிப்பு செய்ய வலியுறுத்தல்


ADDED : நவ 15, 2024 02:42 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:கேங்மேன்களில் 10 சதவீதம் பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு பணிவிடுவிப்பு செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதன் மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் கூறியதாவது: மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு 300, 400, 500 கி.மீ., தொலைவுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பல்வேறு கட்ட போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தலைமை பொறியாளர் பணியமைப்பு, 10 சதவீதம் பணியிட மாறுதல் வழங்கி உள்ளார்.

இவ்வாறு மாறுதல் பெற்ற நிலையில் மறு நியமன உத்தரவு பெற்றும் முறையான பணி விடுவிப்பு செய்யப்படவில்லை. குறிப்பாக கோவை வடக்கு வட்டம், ஒரு சில வட்டத்தில் ஒரு சில பணியாளர்களை மட்டும் பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்பாடுகள் கேங்மேன் பணியாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

இப்பணியாளர்களின் நலனுக்காகவும், வாரிய பணிகள் தொய்வின்றி நடக்கவும் 10 சதவீத பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு உடனடியாக பணிவிடுவிப்பு செய்து உத்தரவிடவேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us