sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல் கொள்முதல் ஈரப்பத முடிவை விரைவாக அறிவிக்க வலியுறுத்தல்

/

நெல் கொள்முதல் ஈரப்பத முடிவை விரைவாக அறிவிக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதல் ஈரப்பத முடிவை விரைவாக அறிவிக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதல் ஈரப்பத முடிவை விரைவாக அறிவிக்க வலியுறுத்தல்


ADDED : நவ 06, 2025 12:28 AM

Google News

ADDED : நவ 06, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது.

நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது.

இது தொடர்பாக, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய மூன்று குழுக்கள், தமிழகம் வந்து ஆய்வு செய்தது.

ஆய்வு முடிவை, மத்திய உணவுத் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு செய்தும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப் பதம் உயர்த்தப்படவில்லை.

அதே நிலை இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக, மத்திய குழு சமர்ப்பித்த ஆய்வு முடிவை விரைவாக வெளியிட்டு, ஈரப்பத உயர்வு அறிவிப்பை வெளியிடுங்கள் என, மத்திய உணவுத் துறை அதிகாரிகளிடம், தமிழக உணவுத் துறை உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தி உள்ளன.






      Dinamalar
      Follow us