sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'எலக்ட்ரிக் கெட்டில்' ரயில்களில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை

/

 'எலக்ட்ரிக் கெட்டில்' ரயில்களில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை

 'எலக்ட்ரிக் கெட்டில்' ரயில்களில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை

 'எலக்ட்ரிக் கெட்டில்' ரயில்களில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை


ADDED : டிச 06, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ரயில்களில், 'எலக்ட்ரிக் கெட்டில்' எனப்படும், தண்ணீர் கொதிக்க வைக்க பயன்படுத்தும் பாத்திரத்தை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

விரைவு ரயில்களில் மொபைல் போன், லேப்டாப்களை, 'சார்ஜ்' செய்யும் வகையில், 'சார்ஜிங் பாயின்ட்'கள் உள்ளன. இந்த சார்ஜிங் பாயின்ட்களை தவறாக பயன் படுத்தக் கூடாது. ஆனால் சிலர், 'கெட்டில்' எனும் மின்சாரத்தில் செயல்படும் பாத்திரத்தை பயன்படுத்தி, டீ, காபி போடுவதாக புகார்கள் வந்துள்ளன.

சமீபத்தில், மஹராஷ்டிராவில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில், 'கெட்டில்' பயன்படுத்தி, நுாடூல்ஸ் செய்து சாப்பிடும் வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் மீது, மத்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு சிலிண்டர், அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை, ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது.

அப்படி எடுத்து செல்வோர், சக பயணியர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவராக கருதப்படுவார். அதேபோல், 'சார்ஜிங் பாயின்ட்'களில், 'கெட்டில்' போன்ற மின் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us