தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராகுல் மீது வைகோவிற்கு திடீர் பாசம்

 ராகுல் மீது வைகோவிற்கு திடீர் பாசம்

 ராகுல் மீது வைகோவிற்கு திடீர் பாசம்

6


ADDED : செப் 01, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:34 AM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'முதல்வர் விஜய் பிரதமர் ஆவார்' என பேசுவதை, த.வெ.க., அமைச்சர்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிவித்து, அவர் மீது பாசமழை பொழிந்துள்ளார்.

லோக்சபா தேர்தல், வரும் 2029ல் நடக்க உள்ளது. தமிழகத்தில் த.வெ.க., கூட்டணி அரசில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

ராகுலை பிரதமராக்க, காங்கிரசார் முயற்சித்து வரும் நிலையில், த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர், முதல்வர் விஜயை, 'வருங்கால பிரதமர்' என்று பேச தொடங்கி உள்ளனர்.

இது, காங்கிரசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக அறிவித்தார்.

தமிழக அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று முன்தினம், கன்னியாகுமரியில் நடந்த காங்., நிகழ்ச்சியில் பேசுகையில், 'ராகுல் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர். அதற்கு த.வெ.க., உடன்படாவிட்டால், காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம்' என்றார்.

இந்நிலையில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இண்டி கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது.

''எனவே, ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். முதல்வர் விஜய்க்கு கற்பனையில் கூட அப்படியான எண்ணம் இருக்காது; இல்லை என்பது தான் என் கருத்து,'' என்றார்.

பிரதமர் வேட்பாளர் தொடர்பாக, காங்., - த.வெ.க., இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், வைகோ கருத்து கூறியுள்ளார். அவர் திடீரென ராகுல் மீது பாசமழை பொழிந்திருப்பதை, காங்., நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என கூறி, வைகோ வெளிப்படையாக ஆதரித்திருப்பது, லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என்றும் காங்கிரசார் கருதுகின்றனர்.

'த.வெ.க., தலைமையை சிந்திக்க வைக்கும்'


காங்கிரசின் தமிழக நிர்வாகிகள் கூறியதாவது: ராகுலுடன் வைகோ சமீபகாலமாக அரசியல் ரீதியாக நெருக்கமாகி வருகிறார். வைகோவின் பார்லிமென்ட் பேச்சுக்கள் அடங்கிய நுால் வெளியீட்டு விழாவில் ராகுல் பங்கேற்று, வைகோவை புகழ்ந்து பேசினார். அதேபோல, ராகுலை எதிர்கால பிரதமர் என வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் குறிப்பிட்டனர்.
விஜய் பெயரை, பிரதமர் வேட்பாளர் விவாதத்திலிருந்து விலக்கி வைக்கும் வகையில், வைகோவின் கருத்து அமைந்துள்ளது. வைகோவின் ஆதரவை, காங்., கூட்டணிக்கு முக்கிய ஆதரவாக பார்க்கிறோம். வைகோவின் கருத்து, த.வெ.க., தலைமையை சிந்திக்க வைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us