sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை

/

லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை

லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை

லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை


ADDED : செப் 16, 2011 11:37 PM

Google News

ADDED : செப் 16, 2011 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு, கடலூர் கோர்ட்டில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த சேவூரைச் சேர்ந்தவர் ரவி. இவரது உறவினர் மகேந்திரன். கடந்த 2007ம் ஆண்டு, பாம்பு கடித்து இறந்தார். இவர், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இருந்ததால், இழப்பீட்டுத் தொகை வாங்க, ரவி வெண்கரும்பூர் வி.ஏ.ஓ., ரங்கநாதனிடம் இறப்புச் சான்றிதழ் கேட்டார். அதற்கு, வி.ஏ.ஓ., ரங்கநாதன், 1,750 ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். இது குறித்து, ரவி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் அறிவுரையின்படி, கடந்த 2008ம் ஆண்டு அக். 20ம் தேதி ரவி, வெண்கரும்பூர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த ரங்கநாதனிடம் 1,750 ரூபாய் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரங்கநாதனை கைது செய்து, கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., ரங்கநாதனுக்கு, ஒரு ஆண்டு சிறையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து @நற்று தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us