sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

/

துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

35


ADDED : ஏப் 21, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:49 AM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஊட்டியில் வரும் 25, 26ம் தேதிகளில், கவர்னர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில், பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'பல்கலை வேந்தராக கவர்னரே தொடர்கிறார். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us