sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

/

அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

3


ADDED : அக் 29, 2025 02:15 PM

Google News

3

ADDED : அக் 29, 2025 02:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: துணை ஜனாதிபதி ஆன பிறகு முதன்முறையாக கோவை, திருப்பூர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உழைப்பு ஒருபோதும் வீணாகாது; திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

அமெரிக்காவின் ஏற்றுமதி எதிர்காலத்தில் இரண்டு மடங்காக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். தொழில் துறையினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவிநாசி அப்பன் அருளால் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

பிரதமர் மோடி என்ன பேசுகிறார் என உலகம் உற்று நோக்குகிறது. சிறப்பான காலங்களும், கடின காலங்களும் வரும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெல்லலாம். சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதே எப்போதும் நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.






      Dinamalar
      Follow us