200 தொகுதிகளில் வெற்றி: இறுமாப்புடன் சொல்கிறார் கனிமொழி
200 தொகுதிகளில் வெற்றி: இறுமாப்புடன் சொல்கிறார் கனிமொழி
ADDED : டிச 07, 2024 04:48 PM

திருச்செந்தூர்: '' 200 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என இறுமாப்புடன் சொல்கிறேன்,'' என தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க., தலைவர் விஜய்,' இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகின்றனர். இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் சுயநலத்திற்கக அமைத்துள்ள உங்கள் கூட்டணி கணக்குகளை 2026 சட்டசபை தேர்தலில் மக்களே 'மைனஸ் ' ஆக்கி விடுவர்' எனக்கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயை தி.மு.க.,வினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., எம்,பி., கனிமொழி பேசியதாவது: இந்த தேர்தல் வெற்றி உங்கள் கரங்களிலே இருக்கிறது என்ற ஒரு கட்டுப்பாட்டுடன் கடமையுடன் பணியாற்றினால், வெற்றி நிச்சயம். முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல், 200 தொகுதிகளிலும் நிச்சயமாக நானும் சொல்கிறேன், இறுமாப்புடன் சொல்கிறேன் வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம். இவ்வாறு கனிமொழி பேசினார்.