ADDED : அக் 03, 2025 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டு திருட்டை கண்டித்து, நாடு முழுதும் 6 கோடி கையெழுத்து பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். கரூர் சம்பவத்தில் தமிழக அரசு ஒரு ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையம், நீதிபதி அருணா தலைமையில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும்; அரசியல் செய்யக்கூடாது. கரூர் பொது கூட்டத்தில் போலீசார் இல்லையென்றால், அன்றைய தினம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். அதற்கான 'வீடியோ' ஆதாரங்கள் உள்ளன.
- செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழக காங்.,