பரந்தூர் செல்ல விஜய் திட்டம்?: பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.,க்கு கடிதம்
பரந்தூர் செல்ல விஜய் திட்டம்?: பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.,க்கு கடிதம்
ADDED : ஜன 11, 2025 09:21 PM

காஞ்சிபுரம்: விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக போராடிவரும் பரந்தூர் மக்களை பொங்கல் பண்டிகை முடிந்து சந்திக்க த.வெ.க., தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து உள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து அப்பகுதி மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் த.வெ.க., சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க வேண்டும் என த.வெ.க., அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

