sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: இருவர் கைது

/

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: இருவர் கைது

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: இருவர் கைது

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: இருவர் கைது

27


ADDED : பிப் 22, 2024 03:39 PM

Google News

ADDED : பிப் 22, 2024 03:39 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேமுதிக தலைவராக இருந்த மறைந்த விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி அளவிற்கு மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாதவரம் பகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளை கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளை சுதீஷின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறி கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us