sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிராம மக்கள் சாலை மறியல்

/

கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : மார் 18, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே நான்கு வழிச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டித்தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலை அமைத்தபோது, பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில் இருந்த இரண்டு பயணியர் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் பயணியர் நிழற்குடை கட்டி தரவில்லை.

இதனை கண்டித்தும், இந்நிலையில், பயணியர் நிழற்குடை கட்டித்தர வேண்டும், பெரியகுமட்டி பஸ் நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் அருகே திரண்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார், நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us